AkilanGandhi AkilanGandhi Anu's Kitchen . . . அனுவின் சமையலறை . . . AkilanGandhi



Thursday, July 1, 2010

திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா

தேவையான பொருட்கள்:

நெய் - 300 கிராம்,

சம்பா கோதுமை - 200 கிராம்,

சீனி - 600 கிராம்

செய்முறை:

கோதுமையை முதல் நாளே தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். ஊறிய பின்பு ஆட்டுக்கல்லில் போட்டு அரைக்க அரைக்க பாலாக பொங்கும். அதை ஒரு துணியை வைத்து வடிகட்டி எடுக்க வேண்டும்.

அடுப்பில் ஒரு வாணலியை (பாத்திரம்) வைத்து, அதில் கோதுமைப் பாலை ஊற்ற வேண்டும். பால் கொதித்து வரும்போது சீனியைப் போட்டு நன்றாக கிளற வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கிளறுவதை நிறுத்தக் கூடாது. பாலும், சீனியும் இறுகி கெட்டியான ஒரு பதத்திற்கு வரும்போது,நெய்யை ஊற்றிக் கிளற வேண்டும். கிளறிக்கொண்டிருக்கும்போதே அல்வா குங்கும நிறத்திற்கு மாறிவரும். அப்படி வந்தவுடன் ஒரு பெரிய தட்டில் ஊற்றி ஆற வைக்க வேண்டும். நன்றாக ஆறியபின்பு எடுத்துச் சாப்பிட்டால் இருட்டுக்கடை அல்வாவின் சுவை தானாக வரும்!

1 comment: